ஃபோர்டு நிறுவனம் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டுக்கு சென்னை மற்றும் குஜராத்தில் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை மூடிவிட்டு வெளியேறப்போவதாக கடந்த 2021ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து, குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க, இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முயற்சித்தது. ஃபோர்டு மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள, குஜராத் அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளது.














