சென்னையில் 19 இடங்களில் இன்று குடும்ப அட்டை குறைதீர்வு முகாம்

சென்னையில் இன்று 19 இடங்களில் , உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படும் சேவைகளை உறுதி செய்யும் நோக்கில், தமிழகம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் மாதந்தோறும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, ஆகஸ்ட் மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் […]

சென்னையில் இன்று 19 இடங்களில் , உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படும் சேவைகளை உறுதி செய்யும் நோக்கில், தமிழகம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் மாதந்தோறும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அறிவிப்பின் படி, ஆகஸ்ட் மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பொருட்கள் வாங்குவதற்காக நியாயவிலை கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu