சட்டசபைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை சட்டசபை மீண்டும் கூட உள்ளது. தமிழக பட்ஜெட் கடந்த 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, வேளாண் பட்ஜெட் 15 ஆம் தேதி முன்வைக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் 17 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசினர். சட்டசபைக்கு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை […]
யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் இன்றி பட்டப்படிப்புகளை வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை கற்பிக்க யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக் குழு) அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். இருப்பினும், யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் இன்றி பட்டப்படிப்புகளை வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. யு.ஜி.சி.யின் அங்கீகாரம் இல்லாமல் வழங்கப்படும் எந்த உயர்கல்வியும் சட்டபூர்வமாக செல்லாது என்பதோடு, அந்த படிப்புகள் வேலை வாய்ப்புகளுக்கும் […]
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களுக்கு ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த 6 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 14 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, அவர்களுக்கு தலா இலங்கை பணம் ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.1.30 லட்சம்) […]
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.70 கோடி வருவாய் இழப்பு. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர் போன்ற பகுதிகளில் விசைத்தறி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பகுதிகளில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் மற்றும் 10,000 விசைத்தறி கூடங்கள் இயங்குகின்றன. இந்நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை […]
கட்டணமில்லா பயண அட்டைகளை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் ஆகியோருக்கு கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் மூலம் பெறும் வசதி கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 7.9.2023 அன்று இந்த சேவை அறிமுகமானது. பயனாளிகள் எந்த சிரமமும் இன்றி, அருகிலுள்ள அரசு இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai இணையதளம் […]
சென்னை மாநகரை அழகுபடுத்தும் பணிக்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், நகரத்தின் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, சாலை மைய தடுப்புகள் மற்றும் தீவுத்திட்டங்களை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும், மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.