செய்திகள் -

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்வு

Apr 22, 2025
சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து இந்த உயர்வு வழங்கப்படும் என அவர் கூறினார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 23,629 ஊழியர்கள், அதாவது 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், தொகுப்பூதிய முறையில் பணியாற்றி […]

குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் – கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு

Apr 22, 2025
இன்று முதல் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வை எதிர்த்து, கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பிரச்னையை தீர்க்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அரசு தரப்பில் வரி விபரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்று, குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர். இதனையடுத்து, […]

தொகுப்பூதிய செவிலியர்களுக்குச் சம ஊதியம் வழங்க உயர்நீதிமன்ற உத்தரவு

Apr 22, 2025
தொகுப்பூதிய செவிலியர்களுக்குச் சம ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இந்தப் பிரச்னையை நீதிமன்றம் எடுத்துக் கொண்டு, இருவரும் ஒரே பணியை செய்கிறார்களா என ஆராய்ந்து, ஆறு மாதங்களில் முடிவெடுக்க அரசு கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், செவிலியர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், […]

நாட்டில் 13.86 லட்சம் அலோபதி டாக்டர்கள்: மத்திய அரசு தகவல்

Apr 11, 2025
மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 74 கல்லூரிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள டாக்டர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதைய கணக்குப்படி நாடு முழுவதும் 13,86,150 அலோபதி டாக்டர்கள் பதிவாகியுள்ளனர். அதேபோல், 7,51,768 ஆயுஷ் டாக்டர்கள் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் இயற்கை மருத்துவம்) உள்ளனர். தற்போது நாட்டின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டால், 811 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் டாக்டர்கள் உள்ளனர். மருத்துவக் கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் மத்திய […]

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: ராமநாதபுரத்தில் அறிவிப்பு

Apr 11, 2025
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், 1983-ன் கீழ் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு மீன்வளத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வருடமும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை […]

அமைச்சர் பொன்முடிக்கு பதவி பறிப்பு: திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு

Apr 11, 2025
பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகியிருந்தார். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கூட பொன்முடிக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதனை அறிவித்துள்ளார். அவரது பதவியை திருச்சி சிவா ஏற்கிறார். […]
1 2 3 5

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu