செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில், அதற்கான விதிமுறைகளை முதல் முறையாக ஐரோப்பிய ஒன்றியம் அமைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித குலத்துக்கு அபாயங்கள் நேரலாம் என கருதப்படுகிறது. எனவே, அபாயங்களை தடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான விதிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் அமைத்துள்ளது. கிட்டத்தட்ட 22 மணி நேரம் விவாதம் நடைபெற்று, ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என கருதப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்துக்கான விதிமுறைகளின் முதல் வரைவு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், கூடுதல் விதிகளுடன் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற கூட்டத்தில், இந்த விதிமுறைகள் வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.