NPCI வெளியிட்ட புதிய UPI விதிமுறைகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த உள்ளது.
தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (NPCI) யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்தும் முறைகளுக்கான புதிய விதிமுறைகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இவற்றின் மூலம் பயனர் அனுபவம் மேம்படும் மற்றும் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய விதிமுறைகள் பிரகாரம், நீண்ட காலம் செயலிழந்த மொபைல் எண்கள் யு.பி.ஐ. முகவரிகளுடன் இணைக்கப்பட்டால், அந்த முகவரிகள் தானாக செயலிழக்கும். இதனால், பயனர்கள் தங்களின் மொபைல் எண்களை புதுப்பிக்க வேண்டும். மொபைல் எண் சரியானதாக உறுதி செய்யப்படாவிட்டால், யு.பி.ஐ. சேவையை பயன்படுத்த முடியாது. மேலும், மொபைல் எண் பதிவுகள் வாராந்திரமாக அப்டேட் செய்யப்பட வேண்டும் என்றும், புதிய எண் ஒதுக்குவதற்கு முன் வெளிப்படையான ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் NPCI அறிவித்துள்ளது.