கூகுள், இத்தாலியில் வரி ஏய்ப்பு புகாரை தீர்ப்பதற்காக 326 மில்லியன் யூரோ (340 மில்லியன் டாலர்கள்) செலுத்த ஒப்புக்கொண்டது. 2015 முதல் 2019 வரையிலான காலத்தில் முறையாக வரி செலுத்தாததாக மிலன் நகர நீதிமன்றம் வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் கூகுளின் விளம்பர வருவாயும் முக்கிய காரணமாக காணப்பட்டது.
கூகுள் இந்த வழக்கை முடிக்க வரி தணிக்கையாளர்களுடன் உடன்படிக்கை செய்து, அனைத்து சட்ட பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதற்கு முன்பு, பிரான்ஸில் கூகுள் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான அபராதம் செலுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.