அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்படும் "அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்" எனப்படும் `தாட்’ (THAAD) கவசத்தை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்படுத்த, இது முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மீது 180க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக இவற்றை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் போரில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.