இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாம் முறை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே போகிறது. நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.71,200 ஆக இருந்தது. இன்று காலை விலை பெரிதும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,025 மற்றும் ஒரு சவரன் ரூ.72,200 ஆக உயர்ந்தது. அதன் பின்னரும் மேலும் ரூ.600 அதிகரித்து தற்போது ஒரு சவரன் ரூ.72,800 மற்றும் ஒரு […]
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டிலும் உயர்வு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை, சென்செக்ஸ் 80,501.99 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று, அந்த இண்டெக்ஸ் சுமார் 160 புள்ளிகள் உயர்ந்து 80,661.62 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சம் 81,049.03 புள்ளிகள், குறைந்தபட்சம் 80,657.71 புள்ளிகள் வரை சந்தை நிலை பெற்றது. இறுதியில் […]
இந்திய கொடியுடன் வரும் கப்பல்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் வரும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய கொடியுடன் வரும் கப்பல்களுக்கும் பாகிஸ்தான் தடை […]
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், பல்வேறு திடீர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். தற்போது அவரது கவனம் திரைப்படத் துறைக்கு மாறியுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். இது ஹாலிவுட் உட்பட அமெரிக்க திரைப்படத் துறைக்கு நெருக்கடி உருவாக்கும் வகையில் பிற நாடுகள் தங்கள் சலுகைகளால் தயாரிப்பாளர்களை ஈர்க்கின்றன என்பதைக் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கும் சினிமா […]
இந்தியா பாகிஸ்தான் பொருள்கள் இறக்குமதிக்கு முழுமையான தடை விதித்துள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு திடமான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இருநாடுகளுக்கிடையே நீண்ட காலமாக இருந்து வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்தது. இதையடுத்து, இந்தியாவில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் நீர் ஒப்பந்த முடிவுக்கு பதிலளிக்கும்படி பாகிஸ்தான், இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்திவிட்டது. […]
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.நிறுவன வாரியக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, 2025 மே 1 முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும். ஆனந்த் அம்பானி இதுபோன்ற நிர்வாகப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றவுள்ளார். இதற்கு முன்னர், ரிலையன்ஸ் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக இருந்து வந்தார். முகேஷ் அம்பானியின் மூத்த மகன் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.