சந்திரனை ஆய்வு செய்ய SpaceX விண்கலத்தை விண்ணில் செலுத்தியது தென் கொரியா

அமெரிக்கா மற்றும் இந்திய செயற்கைக்கோள்கள் சந்திரனைச் சுற்றி இயங்குகின்றன. அத்துடன் சீனாவின் ரோவர் சந்திரனின் தூரத்தை ஆராய்கிறது . இதேபோல் தென்கொரியாவும் சந்திரனை ஆராய்வதற்காக ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தை ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் சந்திரனின், சுற்றுப்பாதையில் சென்று தரையிறங்கும் இடங்களை ஆராயந்து டிசம்பரில் பூமிக்கு தி௫ம்பும். இந்த சோதனை வெற்றி அடைந்தால் நிலவைச் சுற்றும் அமெரிக்க, இந்திய செயற்கைகோள்களைப் போல் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்பேஸ்எக்ஸ் விண்கலமானது 180 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உ௫வாக்கப்பட்டது. இது சந்திரனை […]

அமெரிக்கா மற்றும் இந்திய செயற்கைக்கோள்கள் சந்திரனைச் சுற்றி இயங்குகின்றன. அத்துடன் சீனாவின் ரோவர் சந்திரனின் தூரத்தை ஆராய்கிறது . இதேபோல் தென்கொரியாவும் சந்திரனை ஆராய்வதற்காக ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தை ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் சந்திரனின், சுற்றுப்பாதையில் சென்று தரையிறங்கும் இடங்களை ஆராயந்து டிசம்பரில் பூமிக்கு தி௫ம்பும். இந்த சோதனை வெற்றி அடைந்தால் நிலவைச் சுற்றும் அமெரிக்க, இந்திய செயற்கைகோள்களைப் போல் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்பேஸ்எக்ஸ் விண்கலமானது 180 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உ௫வாக்கப்பட்டது. இது சந்திரனை ஆய்வு செய்வதில் தென்கொரியாவின் முதல் படியாகும். இது சந்திர மேற்பரப்பில் இருந்து 100 கிமீ உயரத்தில் சறுக்குவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்பேஸ்எக்ஸ் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் செயற்கைக்கோளைக் கொண்டுள்ளது.
இதற்கு முன்பு தென் கொரியா முதல் முறையாக ஜூன் மாதம், தனது சொந்த ராக்கெட்டை பூமியைச் சுற்றி செலுத்தியது. ஆனால் அந்த செயற்கைக்கோள் சுற்றுப்பாதையை அடையத் தவறி அச்சோதனை தோல்வியடைந்தது. இ௫ப்பினும் தென் கொரியா தனது சொந்த விண்கலத்தை 2030 குள் சந்திரனில் தரையிறக்க திட்டமிட்டுள்ளது.
மே மாதத்தில், தென் கொரியாவானது நாசா தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து, வரும் ஆண்டுகளில் சந்திரனை ஆராய்சி செய்யும் நாசாவின் "ஆர்ட்டெமிஸ்" திட்டத்தில் இணைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu