பால்டிக் கடலில் 1லட்சம் டன் இரசாயன ஆயுதங்கள்

பால்டிக் கடலில் இயற்கைப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள் புதைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய ஐரோப்பா மற்றும் வட ஐரோப்பாவிற்கு இடையில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் புதைந்துள்ளது. இந்தத் தகவல் போலந்து அகாடமி ஆப் சயின்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை போலந்து நாட்டின் நாளிதழ் ஒன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் உறுதி செய்துள்ளது. இரண்டாம் உலகப் போர் […]

பால்டிக் கடலில் இயற்கைப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள் புதைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய ஐரோப்பா மற்றும் வட ஐரோப்பாவிற்கு இடையில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் புதைந்துள்ளது. இந்தத் தகவல் போலந்து அகாடமி ஆப் சயின்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை போலந்து நாட்டின் நாளிதழ் ஒன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் உறுதி செய்துள்ளது. இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பின்னர், நாஜி படைகளால் கைவிடப்பட்ட 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டன் வரையிலான ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலில் புதைந்துள்ளன. அவை காலப்போக்கில் சிதைவடைந்து சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், வாயு குண்டுகள், கண்ணி வெடிகள், பீப்பாய்கள், விமான குண்டுகள் போன்ற பல போர்க்கால ஆயுதங்கள் குவியல் குவியல்களாக இருப்பதால், அவற்றின் மதிப்பை சரிவர கணக்கிட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வாயு குண்டுகள் 70 கிலோமீட்டர் வரை கடலை மாசுபடுத்தும் வல்லமை உடையன. அவற்றால் சுற்றி இருக்கும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் அழியக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதனால் கற்பனைக்கெட்டாத அளவு பேரழிவு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu