மியான்மரில் மழை வெள்ளத்தால் ஐந்து பேர் பலியாகினர். சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்கிறது. இதில் ஐந்து பேர் பலியாகினர். சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மீட்புப்படையினர் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர். மாடி கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.
தற்போதைய வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.