ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய பெண்கள் வீராங்கனைகள் சாதனைகளை தொடர்கின்றனர்.
இந்திய அணி 2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. தமிழகம் சார்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீ. ஏர் ரைபிளில் வெண்கலப் பதக்கம் வென்றார். 50 மீ. ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம் பெற்றார். மனு பாக்கர் 25 மீ. பிஸ்டல் இறுதிப்போட்டியில் 6வது இடத்தில் தன்னை நிலைநிறுத்தினார். இந்த தொடரில் 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். 36 இந்தியர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.