அக்டோபர் 2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்துகளில் கல்வி குழு என்பது ஒரு அங்கமாக உள்ளது. இந்த கல்வி குழுவில் பள்ளி வளர்ச்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வருகிற அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கின்றன. அந்த கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
அந்த கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் பணிகள், கல்வி நிலைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி தொடர்பான ஆலோசனையை முன்வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.