அதானி குழுமம் ஒடிசாவில் 57575 கோடி ரூபாய் முதலீடு

August 12, 2022

அதானி குழுமம், ஒடிசாவில் 57575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இதற்கு, நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வருடத்திற்கு 4 மில்லியன் டன் திறன் அளவில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் 30 மில்லியன் டன் திறன் அளவில் இரும்புத் தயாரிப்பு ஆலை ஆகியவை அதானி குழுமத்தால் அமைக்கப்பட உள்ளன. அலுமினியம் தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப் பொருளான பாக்ஸைட், மற்றும் இரும்பு போன்ற உலோக வளங்கள் ஒடிசாவில் […]

அதானி குழுமம், ஒடிசாவில் 57575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இதற்கு, நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வருடத்திற்கு 4 மில்லியன் டன் திறன் அளவில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் 30 மில்லியன் டன் திறன் அளவில் இரும்புத் தயாரிப்பு ஆலை ஆகியவை அதானி குழுமத்தால் அமைக்கப்பட உள்ளன. அலுமினியம் தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப் பொருளான பாக்ஸைட், மற்றும் இரும்பு போன்ற உலோக வளங்கள் ஒடிசாவில் அதிகமாக உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் 50% பாக்ஸைட் மற்றும் இரும்பு உலோகச் சுரங்கங்கள் ஒடிசாவில் உள்ளன. தற்போது, அலுமினியச் சுத்திகரிப்பு மையம், சுரங்கங்களுக்கு மிக அருகிலேயே கட்டமைக்கப்பட உள்ளன. இதனால் அங்கு உருக்குத் தன்மையிலான அலுமினியம் உற்பத்தி செய்யப்படும். இதனால் இந்தியா தனது இறக்குமதியைக் குறைத்துக் கொள்ளும் நற்சூழல் உருவாகும். கியொஞ்சர் மாவட்டத்தில் உள்ள தியொஜர் பகுதியில் இரும்பு பயன்பாட்டு நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள பத்ராக் மாவட்டத்தின் தம்ரா பகுதியில் மற்றொரு சிறுநிலையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு நிலையங்களையும், சாலை வழியே, குழாய்கள் மூலம் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து பேசிய கௌதம் அதானி, "ஒடிசா மாநிலம் என்றென்றும் நல்லதொரு தொழில் மாநிலமாகத் திகழ்கிறது. மாநிலத்தின் முதல்வர் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார். மேலும், "உலோகத் துறையில் இந்தியா தற்சார்புடன் செயல்படுவது மிக முக்கியம். ஆத்மநீர்பாரதம் என்ற திட்டத்தில் இலக்கை அடைவதற்கு இவை துணை புரியும். மேலும் புத்தாக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதன் மூலமாக பசுமை அலுமினியம் தயாரிப்பு செய்ய முடியும்" என்று கூறினார். மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக, சுமார் 9300 பேருக்கு நேரடியாகவும், 10000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu