அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக பேராசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

வேலூர்: கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022-23ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது பள்ளிகளில் 3,331 ஆசிரியர் பணியிடங்களை காலியாக உள்ளது. இதனை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரசுப்பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், கணிதம் என பல்வேறு பாடங்களில் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பணி […]

வேலூர்: கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022-23ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது பள்ளிகளில் 3,331 ஆசிரியர் பணியிடங்களை காலியாக உள்ளது. இதனை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரசுப்பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், கணிதம் என பல்வேறு பாடங்களில் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் என்றால் முழுமையாக காலி பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்படும்.
இதனால் நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி பெற்று, தற்காலிகமாக டெட் தேர்ச்சி பெறாதவர்களையும் பணியமர்த்த உள்ளது. இது தொடர்பான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முந்தைய கல்வி ஆண்டுகளில், அரசு கல்லூரிகளில் 4,681 தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu