சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், இன்டர்போலில் நுழைவதற்கு சீனா தடுத்ததை அடுத்து தைவான் இந்தியாவின் ஆதரவை கோரியுள்ளது.
சீனா, அதன் ஆதாயங்களுக்காக சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பை (இன்டர்போல்) தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் இன்டர்போல் மீது அதன் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி செல்வாக்கைச் செலுத்தி வருகிறது.
1984 வரை, தைவான் இன்டர்போல் பொதுச் சபையின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் சீனா தைவானை ஒதுக்கியது. இந்நிலையில், 90வது இன்டர்போல் பொதுச்சபை இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தைவான் நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆணையர் கூறுகையில் ,"தைவான் இன்டர்போலின் உறுப்பு நாடு அல்ல. எங்களின் பிரதிநிதிகளை பொதுச் சபைக்கு அனுப்ப முடியாது. இந்தியா எங்களை அழைக்கும் அதிகாரம் கொண்ட நாடு. இந்தியாவும் மற்றவர்களும் தைவானை பார்வையாளராக அழைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், தைவான் ஜலசந்தியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தீவைச் சுற்றி 50 க்கும் மேற்பட்ட சீன இராணுவ விமானங்கள் செயல்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
தைவானின் விமானப்படை வியாழன் அன்று அதன் விமான எதிர்ப்பு திறன்களை வெளிப்படுத்தியது. மேலும் எந்த சூழ்நிலையிலும் 24 மணி நேரமும் நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக கூறியது.
இதற்கிடையில், வான் பாதுகாப்பு அதிகாரி சென் டெ-ஹுவான் கூறுகையில், "எங்கள் வழக்கமான பயிற்சி நாள் முழுவதும் நடைபெறுகிறது. 24 மணி நேர ஏவுகணை நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதால், அந்த நேரத்தில் நாங்கள் சிறிதும் பதட்டப்படவில்லை. சீன ராணுவம் செயல்பட்டபோது, நாங்கள் ஏற்கனவே நன்கு தயாராக இருந்தோம் என்றார்.