ஆனந்த் மேகலிங்கம் என்ற தமிழரால் ஸ்பேஸ் ஜோன் என்ற விண்வெளி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இரண்டாவது ஹைபிரிட் ராக்கெட்டை ஏவுவதற்கு தயாராக உள்ளது.
கடந்த 2021 பிப்ரவரியில் 100 பெம்டோ செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் ஜோன் நிறுவனம் வெற்றிகரமாக ஏவியது. இந்த திட்டத்தில் 1347 மாணவர்கள் பங்கேற்று இருந்தது வெகுவாக பாராட்டப்பட்டது. அவர்களில் 800 மாணவர்கள் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரிய வெற்றிக்கு பிறகு, கடந்த 2023 பிப்ரவரியில் 150 பிகோ செயற்கைக்கோள்கள் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி, மிஷன் ரகுமி 2024 என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருவிடந்தை கிராமத்தில் இருந்து மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட் ஏவும் திட்டம் இதன் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது.