இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய மத்திய அரசு யோசனை

August 24, 2022

இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிபுணர் குழு அமைக்க மத்திய அரசு யோசனை கூறியுள்ளது. தோ்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய என்ற வழக்குரைஞா் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சி.டி.ரவிகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது. தற்போது இந்த […]

இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிபுணர் குழு அமைக்க மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

தோ்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய என்ற வழக்குரைஞா் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சி.டி.ரவிகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பு வழக்கறிஞர், இலவசங்கள் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய மத்தியஅரசு தயாராகவுள்ளது. மேலும் இது தொடர்பான கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, குழு அமைக்கப்பட்டாலும், அதன் தலைமை பொறுப்பை யாருக்கு கொடுப்பது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் இலவசத்துக்கும் நலத்திட்டத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது. இலவச திட்டத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பையும், நலத் திட்ட நடைமுறையையும் ஈடுசெய்ய வேண்டியது அவசியம். அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஜனநாயக விரோதமான செயல் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தாா்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu