உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில் அவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு வரும் எமின் தபரோவா, இந்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகியையும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும் என எமின் தபரோவா வேண்டுகோள் விடுப்பார் எனத் தெரியவந்துள்ளது.