ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பிற்கு தடை

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் இடையூறின்றி வந்து செல்லவும் மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்கும் மூன்று மாதங்கள் சினிமா படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை காண நாட்டின் பல்வேறு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். இங்குள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஏராளமான சுற்றுலா தலங்களிலும் சினிமா படபிடிப்பு நடத்தப்படும். இங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு கோடை விடுமுறை சீசனை முன்னிட்டு ஏப்ரல் […]

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் இடையூறின்றி வந்து செல்லவும் மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்கும் மூன்று மாதங்கள் சினிமா படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை காண நாட்டின் பல்வேறு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். இங்குள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஏராளமான சுற்றுலா தலங்களிலும் சினிமா படபிடிப்பு நடத்தப்படும். இங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு கோடை விடுமுறை சீசனை முன்னிட்டு ஏப்ரல் மாதங்களில் கோடை விழா நடத்தப்பட்டு வரும். இந்த ஆண்டிற்கான கோடை விழா விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை காண வரும் சுற்றுலா பயணிகள் இடையூறு இன்றி வந்து செல்லவும் மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரையான மூன்று மாதங்கள் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்படும். அவ்வகையில் இன்று முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படபிடிப்புகள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu