விமான எரிபொருள் விலை குறைந்ததால், விமான கட்டணங்களை குறைப்பது பற்றி பரிசீலித்து வருகிறது.
எரிபொருள் விலை சரிந்ததால் விமான கட்டணங்களை குறைப்பது குறித்து பரீசிலிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து, விமான போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளது.விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, விமானங்களுக்கான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விமான பயண கட்டணங்களும் அதிகரித்துள்ளன. தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டணம் பரிசீலிக்கப்படுகிறது.
விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று கூறுகையில், விமான நிறுவனங்களின் கட்டண தொகை குறைவாக இல்லை. அதேபோல, மிக அதிகமாகவும் கட்டணம் இல்லை. இருப்பினும் விமான எரிபொருள் விலை குறைவை கவனித்து வருகிறோம். இதன் விலை குறைவு மேலும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். அப்போது உள்ளூர் விமான கட்டணம் குறித்து மறுமதிப்பீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.