ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

August 18, 2022

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்ததால், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க நேற்று அனுமதி அளித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு நீர்வரத்து குறைந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை 5:00 […]

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்ததால், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க நேற்று அனுமதி அளித்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால், கர்நாடகாவிலுள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு நீர்வரத்து குறைந்தது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வினாடிக்கு, 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 5:00 மணிக்கு 16 ஆயிரம் கன அடியாக சரிந்தது.இதனால், ஒகேனக்கல்லில் மெயின் பால்ஸ் செல்லும் நடைப்பாதைக்கு கீழ் தண்ணீர் குறைந்துள்ளது. சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்து பாறைகள் தெரிகின்றன.

எனவே, நேற்று, 37 நாட்களுக்கு பின் ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையெடுத்து, சின்னாறு பரிசல் துறையிலிருந்து மணல் திட்டு வழியாக பரிசல்கள் இயக்கப்படுகின்றன. திடீரென அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. ஆனால் ஆற்றில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu