இந்தியாவில் புதிய வகை ஜே. என் -1 வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் புதிதாக பரவும் ஜே.என் -1 வகை கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் கோவாவில் 34 பேர், மகாராஷ்டிராவில் 9 பேர், கர்நாடகாவில் 8 பேர், கேரளாவில் 6 பேர், தெலுங்கானாவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் 4 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை நிலவரப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகாவில் மட்டும் 34 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கர்நாடகா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் பெங்களூர் நகரில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.