கர்நாடகாவில் இன்று பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொறியாளர், பொதுப்பணித்துறை மாண்டியா கோட்ட பொறியாளர், சிக் மகளூர் வணிகவரி அலுவலர், உணவு ஆய்வாளர், வனத்துறை அலுவலர், சாம்ராஜ்நகர் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர், மைசூர் நகர்புற வளர்ச்சி ஆணை அலுவலர், பெல்லாரி உதவி பேராசிரியர், விஜயநகர மாவட்ட எரிசக்தி துறை அதிகாரி, மங்களூர் மேஸ்தாம் அதிகாரி ஆகியோருக்கு தொடர்புடைய 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் 10 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அவை தவிர குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளின் உறவினர்கள் பினாமிகள் என அனைவரின் வீடுகளிலும் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.