ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் ஐந்து படகுகளை எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைப்படுத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை உடனே விடுவிக்க வேண்டும். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதை வலியுறுத்தி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.