காஷ்மீருக்கு மேலும் 1,800 வீரர்களை அனுப்பியது சிஆர்பிஎப்

January 5, 2023

காஷ்மீருக்கு மேலும் 1,800 சிஆர்பிஎப் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தாங்ரி என்ற கிராமத்தில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 4 வயது குழந்தை உட்பட 6 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக 1,800 வீரர்களை சிஆர்பிஎப் அனுப்பியுள்ளது. இதில் 900 பேர் ஏற்கெனவே ரஜவுரியை […]

காஷ்மீருக்கு மேலும் 1,800 சிஆர்பிஎப் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தாங்ரி என்ற கிராமத்தில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 4 வயது குழந்தை உட்பட 6 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக 1,800 வீரர்களை சிஆர்பிஎப் அனுப்பியுள்ளது. இதில் 900 பேர் ஏற்கெனவே ரஜவுரியை அடைந்துவிட்ட நிலையில் எஞ்சியவர்கள் அங்கு சென்றுகொண்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu