கோவை உக்கடத்தில் புதைவிட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவு

August 18, 2022

கோவை உக்கடத்தில் மேம்பால பணிக்காக 110 கிலோ வாட் திறன் கொண்ட புதைவிட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் ரூபாய் 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் சென்றன. இந்த கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்காக செல்வதால் மேம்பாலம் கட்டும் பணி தொடர முடியாத நிலை உருவானது. இதை அடுத்து உக்கடம் […]

கோவை உக்கடத்தில் மேம்பால பணிக்காக 110 கிலோ வாட் திறன் கொண்ட புதைவிட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் ரூபாய் 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் சென்றன. இந்த கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்காக செல்வதால் மேம்பாலம் கட்டும் பணி தொடர முடியாத நிலை உருவானது.

இதை அடுத்து உக்கடம் பெரியகுளம் கரையிலிருந்து துணை மின் நிலையம் வரை உயர் அழுத்த கம்பிகளை புதைவிட கேபிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது உக்கடம் குளக்கரையில் இருந்து துணை மின் நிலையம் வரை பள்ளம் தோண்டப்பட்டு, அதில் உயர் அழுத்த மின்சாரத்தை தாங்கக்கூடிய புதைவிட கேபிள் பதிக்கப்பட்டுள்ளன.

அந்த புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக பெரிய மின் கோபுரம் அமைக்கும் பணி அனைத்தும் நிறைவடைந்துள்ளது.

தற்போது புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu