இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ‘முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர்களின் சுவரில்’ இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் நிபுணர் மற்றும் இரண்டாவது இந்தியரானார்.
2003 மற்றும் 2006ல் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராகவும், ஆராய்ச்சி இயக்குநராகவும் இருந்த ரகுராம் ராஜன் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
கீதா கோபிநாத் 2018 அக்டோபரில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றார்.
வாஷிங்டனில் உலகளாவிய கடன் வழங்குநரின் முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணராக கீதா மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். கீதா கோபிநாத்தின் ஆராய்ச்சி பல சிறந்த பொருளாதார இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அவர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். 2005 ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பொருளாதார உதவி பேராசிரியராக இருந்தார்.
“வழக்கமான நடைமுறையை உடைத்து, நான் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுனர்களின் சுவரில் சேர்ந்தேன்,” என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.