சுகாதாரமற்ற இரத்தமாற்றம் மூலம் எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள் என்று இங்கிலாந்து அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது.
1970கள், 1980கள் மற்றும் 1990களில் பிரிட்டனில் ரத்த பற்றாக்குறை காரணமாக, தேசிய சுகாதார சேவை அமெரிக்காவில் இருந்து இரத்தம் பெற்றது. ரத்த தானம் செய்தவர்கள் கைதிகள் மற்றும் நோய்த்தொற்றின் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் ஆகும். அவர்களின் இரத்தத்திற்காக பணம் செலுத்தப்பட்டது.
அந்த சுகாதாரமற்ற ரத்தம் ஹீமோபிலியா உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்றப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் ஹெபடைடிஸ் சி மற்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டனர். சுமார் 2,400 நோயாளிகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பின்னர் தான் தெரிய வந்தது.
அதன் பின் இந்த நீண்டகால ஊழல் குறித்து பொது விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் அதன் தலைவரான பிரையன் லாங்ஸ்டாஃப் , நடந்துகொண்டிருக்கும் விசாரணை முடிவடைவதற்குக் முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகப் பணம் செலுத்துமாறு பரிந்துரைத்தார் .அதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 1,21,000 டாலர் மதிப்பிலான இடைக்கால நிதி வழங்குவது முடிவானது.
இதற்கிடையே 2017 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பிரிட்டிஷ் நீதி அமைப்பு மூலம் இழப்பீடு பெற அனுமதித்தது. எனினும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களை இந்த அறிவிப்பால் அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் இந்த இடைக்கால நிதியை இழக்க நேரிடும் என்று பிரச்சாரகர்கள் அச்சம் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு பொது விசாரணை முடிவடையும் போது, இழந்த பெற்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் உட்பட இந்த குழுவினருக்கான இழப்பீடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.