சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு முறை ஜாமின் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக இவர் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.