சென்னையில் பனிப்பொழிவு காரணமாக ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பின்வாங்கியதாக அறிவித்தது. இதன் காரணமாக பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. சென்னையில் ராயபுரம், பிராட்வே, எழும்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. முக்கியமான சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை ஏற்றி வாகனங்களை இயக்கினர்.
இந்த பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வரவேண்டிய ரெயில்கள் தாமதமாக உள்ளன. சேரன் விரைவு ரெயில், நெல்லை விரைவு ரெயில், முத்துநகர் விரைவு ரெயில்கள் உள்ளிட்ட பல ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், புறநகர் ரெயில் சேவைகளிலும் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.