சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத அளவாக ஜனவரி 13-ம் தேதி 2,66,494 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. . இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடு அதிகரித்து வருவதையும் காட்டுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இதுநாள் வரை இல்லாத அளவு (13.01.2023) அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,66,494 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.