வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதன் சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது.
2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேகரயில்களை ரயில்வே அமைச்சகம் அறிமுகபடுத்தியது. இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை டெல்லி - வாரணாசி மற்றும் டெல்லி - ஜம்மு வைஷ்ணவ் தேவி வழித்தடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது, இதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் கோட்டா என்ற இடத்திலிருந்து மத்திய பிரதேசத்தின் நக்டா என்ற இடம் வரை மணிக்கு 120 கி.மீ முதல் 183 கி.மீ வரை இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.