சோழ ராணி செம்பியன் மகாதேவியின் வெண்கலச் சிலை வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு

ஜூலை 29, சென்னை தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒ௫ கோவிலில் 1929 ஆம் ஆண்டு சோழ ராணி செம்பியன் மகாதேவியின் சிலை திருடப்பட்டது. இந்த சிலை மூன்றரை அடி உயரம் கொண்ட வெண்கலச்சிலை ஆகும். தற்போது இந்த சிலை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஃப்ரீயர் கேலரியில் சிலை தடுப்பு பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ராஜேந்திரன் என்பவர் 2015 இல் வெளிநாடு பயணத்தின் போது ஃப்ரீயர் கேலரியில் செம்பியன் மகாதேவி சிலையைக் கவனித்துள்ளார்.பின் சிலை பற்றிய தகவலை […]

ஜூலை 29, சென்னை

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒ௫ கோவிலில் 1929 ஆம் ஆண்டு சோழ ராணி செம்பியன் மகாதேவியின் சிலை திருடப்பட்டது. இந்த சிலை மூன்றரை அடி உயரம் கொண்ட வெண்கலச்சிலை ஆகும்.
தற்போது இந்த சிலை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஃப்ரீயர் கேலரியில் சிலை தடுப்பு பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ராஜேந்திரன் என்பவர் 2015 இல் வெளிநாடு பயணத்தின் போது ஃப்ரீயர் கேலரியில் செம்பியன் மகாதேவி சிலையைக் கவனித்துள்ளார்.பின் சிலை பற்றிய தகவலை செம்பியன் மகாதேவியில் உள்ள மக்களிடம் கேட்டு உறுதிப்படுத்திய பிறகு 2018 இல் வேளாங்கண்ணி காவல்துறையில் புகார் அளித்தார். பின்னர் இந்த வழக்கு சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு கொடுக்கப்பட்டது . விசாரணையில், 1929 ஆம் ஆண்டு இந்தசிலையானது நியூயார்க்கில் உள்ள ஹாகோப் கெவோர்கியனிடமிருந்து ஃப்ரீயர் கேலரி ஆஃப் ஆர்ட் விலைக்கு வாங்கியதாக காவல்துறை இயக்குநர் ஜெனரல் கே ஜெயந்த் முரளி தெரிவித்தார். மேலும் 1962ல் கெவோர்கியன் இறந்துவிட்டதால். அவர் யாரிடமிருந்து, எப்படி சிலையை வாங்கினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu