கடந்த நவம்பர் 1ம் தேதி, நாசாவின் லூசி விண்கலம், டிங்கி விண்கல்லை வெற்றிகரமாக கடந்து சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே உள்ள விண்கல் கட்டமைப்பில், டிங்கினேஷ் என்ற விண்கல் உள்ளது. இது சுருக்கமாக டிங்கி என்று அழைக்கப்படுகிறது. இந்த விண்கல்லை எட்டி, கடந்து செல்வது லூசி விண்கலத்தின் மிக முக்கிய மைல்கல்லாகும். லூசி விண்கலம், கிட்டதட்ட 10 விண்கற்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் முதல் விண்கல் டிங்கி ஆகும். இதன் அருகே வெற்றிகரமாக கடந்து சென்றது, இதன் முக்கிய பரிசோதனை வெற்றியாகும். அதன் பிறகு, இந்த விண்கலம் மீண்டும் பூமி நோக்கி திரும்பி வரும். அதன் வழியாக, புவியீர்ப்பு விசையால் உந்தப்பட்டு, மீண்டும் அடுத்த விண்கல்லுக்கு செலுத்தப்படும். இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.