வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வட மாநிலங்களில் கோடை வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது டெல்லியில் வெப்ப அலை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். மேலும் இது படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் பீஹாரின் சில பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது