டெல்லியில் விவசாயிகள் இன்று பேரணி நடத்துவதற்காக புறப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பேரணி நடத்துவதற்காக டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் டெல்லியில் நுழைய முடியாத வண்ணம் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பவான மைதானத்தை தற்காலிக சிரியாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்ததன் அடிப்படையில் டெல்லி அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் பரிந்துரையை டெல்லி அரசு நிராகரித்து உள்ளது.