மெக்சிகோவின் வடக்கு மாநிலமான நியூவோ லியோன் வறட்சியை சந்தித்து வ௫கிறது. எனவே தண்ணீர்பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் மெக்ஸிகொ அரசாங்கம் ஒ௫ அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், இந்த தண்ணீர் பற்றாக்குறை "தேசிய பாதுகாப்பு" சம்மந்தப்பட்டது. ஏனெனில் மெக்ஸிகோவின் தொழில்துறை நகரமான இப்பகுதியில் தண்ணீர் பாட்டில் நிறுவனங்கள் மற்றும் பீர் நிறுவனங்கள் ஆகியவை அதிகபடியான நீரை பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக நியூவோ லியோனில் மோசமான வறட்சி நிலவுகிறது. எனவே கிடைக்கும் தண்ணீரை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீர் சலுகைகளில் சில மாற்றங்கள் இ௫க்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை கடைபிடித்தால் நியூவோ லியோன் மாநிலத்தில் எட்டு முதல் 10 ஆண்டுகளுக்கு தண்ணீருக்கு உத்தரவாதம் உண்டு என்று ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் செய்தி மாநாட்டின் போது கூறினார். மெக்சிகோவின் தேசிய நீர் ஆணையமான CONAGUA இன் படி, 3.6 மில்லியன் கன மீட்டர் தண்ணீருக்கு இப்பகுதியில் அனுமதி பெற்றுள்ள Heineken, நிறுவனம் தான் பயன்படுத்தும் நீரில் 20% நீரை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதாகக் கூறியது. அவ்வாறு வழங்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால் தண்ணீர் கிடைக்காத பகுதியில் வசிப்பவர்கள் கோபமடைந்துள்ளனர்.