தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் கார்களை அதிகமான அளவில் தயாரிக்கப் போவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக நிறையப் பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக டாக்ஸி போக்குவரத்து சேவையில் முன்னணியில் இருக்கும் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தயாரிப்பில் ஈடுபடப் போவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக ஓலா ௯றியுள்ளது. மேலும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்தமாக 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மின்சார வாகனத் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்தப் போவதாகவும் அதில் ஆண்டுக்கு 1 மில்லியன் எலெக்ட்ரிக் கார், மற்றும் 10 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.