வடகிழக்கு பருமழை காரணமாக தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இன்று கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் அருகே மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.