தமிழகம் முழுவதும் ‘பயோமெட்ரிக்’ முறையில் நெல் கொள்முதல்

தமிழகம் முழுவதும் ‘பயோமெட்ரிக்’ முறையில் நெல் கொள்முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இணையத்தில் பதிவுசெய்து, அதன் மூலம் அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு உரிய தொகை வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆதார் அடிப்டையில், விரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே கொள்முதல் செய்யும் பணியை நேற்று முதல் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொள்முதல் மையங்களில் வியாபாரிகள் நுழைவது தடுக்கப்படும். மேலும் இதன்மூலம் […]

தமிழகம் முழுவதும் ‘பயோமெட்ரிக்’ முறையில் நெல் கொள்முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இணையத்தில் பதிவுசெய்து, அதன் மூலம் அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு உரிய தொகை வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆதார் அடிப்டையில், விரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே கொள்முதல் செய்யும் பணியை நேற்று முதல் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொள்முதல் மையங்களில் வியாபாரிகள் நுழைவது தடுக்கப்படும். மேலும் இதன்மூலம் அதிகளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முறை மூலம் நெல்லை காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்யமுடியும். விரல் ரேகை பதிவு மூலம் ஆதார் எண்ணில் பதிந்துள்ள எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) பெறுவதன் மூலம் விவசாயிகள் விவரத்தை துல்லியமாகவும் பதிவேற்ற முடியும். விவசாயிகளும் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை நெல் கொள்முதல் நிலையங்களிலேயே சரிபார்த்து நெல்லை விற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3
3
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu