தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, மாநிலத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சுற்றுலாத்துறை ஆணையராக இருந்த சமயமூர்த்தி, தற்போது மனிதவள மேலாண்மை துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தேசிய சுகாதார இயக்கத்துக்கான இயக்குனராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலா துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சரின் துணைச் செயலராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டார். கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளம் துறை செயலராக சத்யபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேசிய சுகாதார திட்ட இயக்குனராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.