மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 276 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 115 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 24ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரையின் அடிப்படையில் நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியானது மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூபாய் 3454 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.