துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பது சட்டத்துக்குப் புறம்பானது - ஆளுநர் ஆர்.என்.ரவி

August 20, 2022

துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களைத் தேர்வுசெய்ய பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர். தேர்வுக் குழு, துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிலிருந்து 3 […]

துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களைத் தேர்வுசெய்ய பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர்.
தேர்வுக் குழு, துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிலிருந்து 3 பேரை தேர்வுசெய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். இவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமித்து உத்தரவிடுவார்.

இந்நிலையில், இத்தகைய நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும். தேவைப்பட்டால் துணை வேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையில் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
துணை வேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மசோதா குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பது என்பது பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டத்துக்குப் புறம்பானது. மேலும், இது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டது என தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu