தென் மாவட்டங்களில் 900 திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைப்பு

December 19, 2023

மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 995க்கும் மேற்பட்ட வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 475 பேர் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக வந்துள்ளனர். மேலும் அங்கு எட்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ள நிலையில் கூடுதலாக இரண்டு குழுக்கள் வர உள்ளன. மேலும் விமான படையின் ஹெலிகாப்டரும் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மற்றும் […]

மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 995க்கும் மேற்பட்ட வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல்லை,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 475 பேர் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக வந்துள்ளனர். மேலும் அங்கு எட்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ள நிலையில் கூடுதலாக இரண்டு குழுக்கள் வர உள்ளன. மேலும் விமான படையின் ஹெலிகாப்டரும் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மற்றும் 41 இடங்களில் மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 2800 பேர் தங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 முகாம்களில் 517 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 முகாம்களில் சுமார் 456 பேர் தங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 235 இடங்களில் நிவாரண முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மேலப்பாளையம், தச்சநல்லூர் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு உணவு தேவைப்படுவதற்கு உணவு கிடைக்கவும், ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu