தேசிய சீனியர் கூடை பந்து சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாபில் நடைபெற்றது. இதில் தமிழக ஆடவர் அணி தங்கம் வென்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள குருநானக் உள்விளையாட்டு அரங்கத்தில் 73 ஆவது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் இறுதி போட்டியில் ரயில்வே ஆடவர் அணியை 72 - 67 என்ற கணக்கில் தமிழக அணி வென்று தங்கம் வென்றது. தங்கம் வென்ற அணிக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில் மூன்றாவது இடத்தை தமிழக அணி பிடித்து வெண்கலம் வென்றுள்ளது.