இந்தியாவின் வளர்ச்சியில் கைத்தறி முக்கியப் பங்கு வகிப்பதாக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நேற்று ஆளுநர் அவர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுஉள்ளார். அந்த செய்திக்குறிப்பில், இந்தியாவை உருவாக்குவதில், கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை நினைவுகூரும் நாள் இது. தமிழகத்தில் தயாராகும் கைத்தறி, நாட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.
2019 -2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2.4 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், தமிழகத்தில் உள்ளனர். இதில் தென் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்திலும், தேசிய அளவில் மூன்றாவது இடத்திலும் தமிழகம் உள்ளது. தமிழக நெசவாளர்களின் கைவினைத் திறன் ஒப்பற்றது.இந்திய கைத்தறி பொருட்கள், இன்று சர்வதேச சந்தையில் பெரும் அங்கீகாரம் பெற்று வருகின்றன.இந்த ஆண்டு 75-வது சுதந்திர தின பெருவிழாவை கொண்டாடி வருகிறோம். உலகின் குருவாக இந்தியா எழுச்சி பெற, கைத்தறி தொடர்ந்து முக்கியபங்காற்ற வேண்டும் என்று கவர்னர் கூறியுள்ளார்.