ரஷ்ய ஏவுகணைகள் தெற்கு உக்ரேனியாவில் உள்ள துறைமுக நகரமான மைகோலாய்வைத் தாக்கியது. அத்தாக்குதலில் விவசாய நிறுவனமான நிபுலோனின் உரிமையாளரான ஒலெக்ஸி வடதுர்ஸ்கி மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். மேலும் வீடுகள் மற்றும் கல்வி வளாகங்கள் சிதைக்கப்பட்டதாக மைகோலேவ் மேயர் உக்ரேனிய தொலைக்காட்சியில் தெரிவித்தார். அதே நேரத்தில் செவஸ்டோபோலில் உள்ள ரஷ்யாவின் கடற்படைத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது .அதில் 5 ரஷ்ய கடற்படை ஊழியர்கள் காயமடைந்தனர் என்று கிரிமியா துறைமுக நகர ஆளுநர் மிகைல் ரஸ்வோஜாயேவ் தெரிவித்தார். இது குறித்து ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஓல்கா கோவிடிடி "இத்தாக்குதல் செவஸ்டோபோல் பகுதியில் இருந்து நடத்தப்பட்டது" என்று கூறினார். அதுமட்டுமின்றி இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமாணவர்களை கண்டுபிடிப்பதற்காக நகரில் அவசரத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நிபுலோனின் உரிமையாளர் ஒலெக்ஸி வடதுர்ஸ்கியின் மரணம் உக்ரைனுக்கு பெரும் இழப்பு என்று ௯றினார். மேலும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணிப்புப்படி, உக்ரைனின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அவருடைய 2021-ம் ஆண்டு சொத்து மதிப்பு 430 மில்லியன் டாலர் ஆகும். இவர் டிரான்ஷிப்மென்ட் டெர்மினல்கள் மற்றும் லிஃப்ட் நெட்வொர்க்குடன் ஒரு நவீன தானிய சந்தையை உருவாக்கி வைத்திருந்தார். மேலும் இந்த தானிய சந்தையானது உலகின் உணவுபாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று ௯றினார்.