நூறு நாள் வேலை திட்டத்தில் ஆதார் இணைப்பு மூலம் சம்பள விநியோகம்

January 2, 2024

மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என தெரிவித்து இருந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த வேலை வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடந்த ஆண்டு ஐந்து முறை அவகாசம் நீட்டப்பட்டு இறுதி கட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு மேல் கால அவகாசம் இல்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. […]

மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், முறைகேடுகளை தவிர்க்கவும் ஆதார் இணைப்பு அவசியம் என தெரிவித்து இருந்தது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த வேலை வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடந்த ஆண்டு ஐந்து முறை அவகாசம் நீட்டப்பட்டு இறுதி கட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு மேல் கால அவகாசம் இல்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வேலை திட்டத்தில் ஒரு நாள் வேலை பார்த்தாலே அவர்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களாக கருதப்பட்டு வந்தனர்.இதுவரை 25. 25 கோடி தொழிலாளர்களில் 14.35 கோடி பேர் மட்டுமே தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 21 மாதத்தில் 7.6 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைக்கான அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்துவிட்டால் வங்கி கணக்குடன் இணைந்திருக்கும். இதன் மூலம் இதில் நடக்கும் முறைகேடுகள் தவிர்க்க படலாம். மேலும் இதன் மூலம் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பள பணம் பட்டுவாடா செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைத்திருப்பதன் மூலம் மட்டுமே சம்பளம் பண பட்டுவாடா செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu