காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம்,
உள்ள 13 கிராமங்களில் நிலங்களை கையாக படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை எதிர்த்து 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுக்க போடப்பட்ட அரசாணை திரும்பப்பெறும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.